
கோவில் மண்டபம் ஏறத்தாழ 4500 சதுராடியில் அமைந்துள்ளது. கோவில் மண்டபத்தின் தெற்குப்பகுதியின் மையத்தில் தனியே அமைக்கப்பெற்ற கோவிலில் வடக்கு திசை பார்த்து வீற்றிருக்கிறாள் வாழ்வளிக்கும் வன துர்க்கை அம்மன்.
ஸ்ரீ வன துர்க்கை அம்மன்
கோவில் மண்டபத்தின் மேற்கு பகுதியில் கிழக்கு நோக்கி மையத்தில் மூலவர் விநாயகப்பெருமான் ஆலயம் அமைந்துள்ளது. விநாயகப்பெருமானின் வலப்புறம் அருள்மிகு சரஸ்வதி தேவியும் இடப்புறம் தாய் மூகாம்பிகையும் தனித்தனியே அமைக்கப்பெற்ற கோவிலில் வீற்றிருக்கின்றனர்.
மண்டபத்திற்கு வெளியே கோவில் வளாகத்தில் வளத்தையும் செல்வச் செழிப்பையும் தரும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் நேர்த்தியாக அமைக்கப்பட்ட கல் மண்டபத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை அடுத்து சூரியபகவானின் எழுபரித்தேர்க்குடையின் கீழே நவகிரஹங்கள் அமைந்துள்ளது.
ஆலயத்தில் வீற்றிருக்கும் தெய்வங்கள்
ஸ்ரீ வன துர்க்கை அம்மன்