வாரம்தோறும் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளி அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
பால்குட விழா ஆண்டுதோறும் ஆடி மாதம் பால்குட விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
குருப்பெயர்ச்சி மற்றும் சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி மற்றும் சனிப்பெயர்ச்சி போன்ற நிகழ்வுகளில் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
இதர சிறப்பு தினங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சரஸ்வதி பூஜையன்று கற்பக மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் கற்பகா கிட்ஸ் - புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு சரஸ்வதி தேவிமுன் வழிபட்டு நெல்மணிகளில் மொழியின் முதல் எழுத்தான "அ" எழுதி பள்ளிப்படிப்பை துவங்கும் சிறப்பு நிகழ்வும் நடைபெறுகிறது.
இவை தவிர மக்கள் தங்களின் இல்ல சிறப்பு நிகழ்வுகளையும் அம்மன் ஆலயத்தில் நிகழ்த்தி அந்த நாளை இறைவனின் அருளோடு மகிழ்வான சூழலில் கொண்டாடி வருகின்றனர்.